நாவிதனின் கடையினிலே
என் தலை நிறைய முடி இருந்தது ஒரு காலம். அப்போதெல்லாம் முடி திருத்தும் நிலையம் செல்லும்போது, எப்படி எப்படி முடி திருத்த வேண்டும் என்று முடிதிருத்துபவருக்கு விவரமாக அறிவுரை கூறுவதுண்டு.
ஆனால் இப்போதோ தலையில் முடி எங்கே என்று தேடவேண்டி இருக்கிறது. ஆனாலும் "இப்படிச் செய், அப்படிச் செய்"என்று அறிவுரை கூறுவதை நிறுத்த முடிவதில்லை. இதைக் கேட்டு நாவிதரும், பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் வாய் விட்டுச் சிரிக்காததுதான் குறை!
இந்த நிலைமை பற்றி ஒரு பாடல்!
அன்புடன்
ரமேஷ்
வகிடெடுத்து வக்கணையாய் வாரிவந்த காலம்போய்
துகிலிழந்து துயருற்ற தோகைமயில் போலாகி
சிகையிழந்து சிறிதளவே சிரத்தினில் இருக்கையிலே
"வகையாக வெட்டிவிடு, ஜாக்கிரதை" எனக்கூறி
நகைப்புக்கு உள்ளானேன் நாவிதனின் கடையினிலே!